ஞாயிறு, 11 மார்ச், 2018

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 50) - பசுவும் ஆனேறும்

                                குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 50) - பசுவும் ஆனேறும்


பசுவும் ஆனேறும்

    ஆனிரை முல்லை நிலத்துக்குரியது; காலையில் மேய் புலத்திற்குச் சென்று மேய்ந்து விட்டு மாலையில் வீட்டிற்குத் திரும்பி வரும். வருங்கால் பசுக்கள் கன்றை நினைந்து மடியில் பால் சுரப்ப வரும் காட்சி ஒரு செய்யுளில் சொல்லப்படுகின்றது. தன் தாய்ப்பசுவின் வரவைக் கன்று மாலைக் காலத்தில் எதிர்நோக்கி நிற்கும். பசுவிற்கும் கன்றுக்குமிடையே உள்ள அன்பு மிகச் சிறந்தது; ஆதலின் அதனைத் தலைவனுக்கும் தலைவிக்கும் இடையேயுள்ள அன்பிற்கு உவமை கூறுவர்.

    பசு அறுகம்புல்லை உண்பதில் விருப்பமுடையது. முதிய பசு இளம்புல்லைக் கடித்து உண்ண முடியாவிடினும் நாவினால் தடவு மட்டில் ஒருவகை இன்பத்தைப் பெறும். பசுவின் அலை தாடியை அணல் என்பர். அது நிலத்தளவும் நாலும்.

    பசுவின் நிரையோடு ஏறும் இருக்கும்; ஆதலில் அந்நிரையை, “ஏறுடையினம்” என்பர். அவ்வேற்றின் கழுத்தில் மணி கட்டுதல் வழக்கம். இராக் காலத்தில் அம்மணியின் ஒலியைக் கேட்டு தலைவி வருந்துவாள். பசுக்கள் தங்குமிடம் தொழுவம், மன்று, மன்றமெனக் கூறப்படும்.

    எருது உழவிற்குப் பயன்படும். அது வேனில் காலத்தில் உழாது சோம்பி இருக்கும்; வெப்ப மிகுதியினால் மெலிவடையும்.
 
(தொடரும்).

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...