ஞாயிறு, 11 மார்ச், 2018

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 47) - எலி, எறும்பு, ஓந்தி, கடமா, குதிரை

                 குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 47) - எலி, எறும்பு, ஓந்தி, கடமா, குதிரை


எலி

    வீட்டில் வளரும் எலியை இல்லெலி என்பர். இதனை யாமத்தில் தேடிக் காட்டுப் பூனை உண்ணும்.
 
எறும்பு

    இந்நூலில் ஒரு செய்யுளில் எறும்பு எறும்பியெனச் சொல்லப்படுகின்றது. இதன் வளையை அளை என்றும் கூறுவர்; அது மிகவும் சிறியது. குறிஞ்சி நிலத்தில் பாறைகளில் உள்ள குறுஞ்சுனைகளுக்கு அவ்வளைகள் உவமையாகக் கூறப்படுகின்றன.
 
ஓந்தி

    இது பாலை நிலத்தது. இதன் முதுகிற்குக் கருக்கரிவாளை ஒரு புலவர் உவமை கூறுகின்றார். இதன் ஆணைப் போத்தென்றல் மரபு. பாலை நிலத்தில் செல்வார் பார்க்கும் நிமித்தத்திற்குரிய பொருள்களுள் இதுவும் ஒன்று.
 
கடமா

    கடமை, கடமா என்பன ஒரு பொருட்சொற்கள். இவ்விலங்கு தினைக்கொல்லையில் புகுந்து தினையை உண்ணும். வேட்டுவர் இதனை அலைத்து வேட்டையாடுவர்.
 
குதிரை

    குதிரையை மக்கள் பலவாறு பயன்படுத்திக் கொள்வர். தனியே ஏறிச் செலுத்துவதும், தேரில் பூட்டிச் செலுத்துவதும் உண்டு. போரில் குதிரைப்படை ஒரு பிரிவாகும். தேரில் பூட்டிய குதிரையின் வேகத்திற்குக் காற்றை உவமிக்கின்றார் ஒரு புலவர். போர்க் குதிரை துள்ளி எழுவதை மற்றொரு புலவர் குறிக்கின்றார்,

(தொடரும்).

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...