வெள்ளி, 20 அக்டோபர், 2017

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 32 - குளவி, குறிஞ்சி, குன்றி

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 32 - குளவி, குறிஞ்சி, குன்றி

குளவி

     மலை மல்லிகையைக் குளவி என்பர். காட்டு மல்லிகையையும் அங்ஙனம் கூறுவதுண்டு. இது பெரும்பாலும் குறிஞ்சி நிலத்திலும் சிறுபான்மை பாலை நிலத்திலும் காணப்படும். குறிஞ்சி நிலத்தில் மலரோடு முளைத்த இதனை மலைவாணர் களையாகக் களைந்தெறிவர். பாலை நிலத்தில் நீருள்ள சிறு பள்ளங்களுக்கு அருகில் இது வளரும்; இதன் மலர் அந்நீரில் விழுந்து அழுகியிருக்கும். நறுமணம் உடைய இதன் மலரைத் தலைவியின் நுதல் மணத்திற்கு உவமை ஆக்குவர். இதன் இலைகள் பெரியனவாக இருக்கும்.
 
குறிஞ்சி

    குறிஞ்சி நிலத்திற்கு அடையாளமாக விளங்குவது இது. இதன் தண்டு கரிய நிறமாக இருக்கும். இதன் மலரில் தேன் மிகுதியாக உண்டு. இம்மலர் பல வருஷங்களுக்கு ஒரு முறை மலர்வதென்று கூறுகின்றனர்.
 
குன்றி


    இது கொடி வகையுள் ஒன்று. இதன் வித்தை மணி என்பர். அது சிவப்பு நிறம் உடையதாதலின் முருகனது செந்நிற ஆடைக்கு உவமையாகக் கூறப்படுகின்றது.

(தொடரும்)

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...