வெள்ளி, 20 அக்டோபர், 2017

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 31 - குவளை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 31 - குவளை


    இது குறிஞ்சி நிலத்திலுள்ள சுனைகளில் வளர்வது; “சுனைக் குவளைஎனச்சிறப்பிக்கப்பெறும். கருங்குவளை, செங்குவளை என இருவகை இதில் உண்டு. அவற்றுள் கருங்குவளை மகளிர் கண்ணுக்கு உவமையாகக் கூறப்படும். இது நீர்நிறைந்த இடத்தில் வளம் பெற்று வளர்வது. இம்மலர் மிக்க மென்மை உடைய தாதலின் வண்டுகள் படிந்த அளவில் அழகு கெடுவது. இதன் நறுமணத்தைத் தலைவியின் மேனி, கூந்தல், நுதல் என்பவற்றின் இயற்கை மணத்திற்கு உவமையாகக் கூறுவர். குவளையோடு காந்தளையும் முல்லையையும் தொடுத்தமைத்தலுண்டு. இதன் காம்பு குறியது. மகளிர் இதனைக் கூந்தலில் புனைதலும் தழையிடையிற் கலந்து தொடுத்து அணிதலும் வழக்கம். தலைவன் குவளைக் கண்ணியை அணிந்து வருதலும் குவளை மாலையைத் தலைவிக்குக் கையுறையாக அளித்தலும் மரபு.

(தொடரும்)

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...