ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2016

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 28) - கவலைக்கிழங்கு, கள்ளி, காஞ்சி

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 28) -  கவலைக்கிழங்கு, கள்ளி, காஞ்சி

கவலைக் கிழங்கு

    இது முல்லை நிலத்திற்குரியது. வேடர் இதனை அகழ்ந்து உணவாகக் கொள்வர்.
 
கள்ளி

     பாலை நிலத்திற்குரியது. அந் நிலத்தின் வெம்மையால் இதன் அடி பொரிந்திருக்கும்; காய்கள் வெடிக்கும்; அங்ஙனம் வெடிக்கும்போது ஒலி உண்டாகும்; அதனை, “கவைமுட் கள்ளிக் காய்விடு கடுநொடி” என்பர் ஒரு புலவர். இதன் முள் கிளைத்திருத்தலை அவர் இதில் குறித்திருக்கின்றார்.
 
காஞ்சி

    மருத நிலத்துக்குரிய மரம் இது. வயல்களுக்கு அருகில் வளர்ந்த இம் மரத்திலுள்ள பூந்தாது தம்மேல் உதிரும் வண்ணம் இதன் கிளையை உழவர் வளைக்கும் செய்தி ஒரு பாட்டில் காணப்படும். இதன் மலர் மணம் உடையது. இதன் பூங்கொத்துக்குப் பயறு உவமையாகச் சொல்லப்படும்.

(தொடரும்)

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...