ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2016

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 24) - உழுந்து, எருக்கு

  குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 24) -  உழுந்து, எருக்கு

உழுந்து

    முல்லை நிலத்துப் புன்செய் விளைபொருள்களுள் ஒன்றாகிய உழுந்தின் அடிக்குக் குறும்பூழ்ப் பறவையின் காலை ஒரு நல்லிசைப்புலவர் உவமை கொள்கின்றார். வேரின் சிறு பகுதி வெளித்தோன்றிய அடித்தண்டின் தோற்றத்திற்கு அவ்வுவமை மிகப் பொருத்தமாக இருக்கின்றது. முன் பனிக் காலத்தில் உழுத்தங்காய் முதிரும். அதனை மானினம் கவர்ந்து உண்ணும். உழுந்து பின் அதன் காயைக் கழுந்தினால் அடித்து உடைப்பது வழக்கம்.
 
எருக்கு

    ‘குவிமுகி ழெருக்கு’ என்று இது கூறப்படுகின்றது. மடலேறும் ஆடவர் இதன் மலராலாகிய கண்ணியைச் சூடி வீதியிலே வருவர்.

(தொடரும்)

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...