புதன், 7 ஆகஸ்ட், 2013

சுதா மேனிலைப் பள்ளி வெள்ளிவிழா

    புதுச்சேரி மாநிலம், திருக்கனூரில் அஞ்சலையம்மாள் அறக்கட்டளை என்ற பெயரில் ஓர் அறக்கட்டளை நிறுவி, பின்தங்கிய நிலையிலுள்ள மாணவர்களின் கல்வி வளத்தைப் பெருக்கும் வகையில் சுதா மேனிலைப் பள்ளி, உஷா இலட்சுமணன் கல்வியியல் கல்லூரி ஆகியவற்றைத் தொடக்கித் திறம்பட நடத்தி வருகின்றார் கல்வியாளர் முனைவர் ம. இலட்சுமணன் அவர்கள். அவருடைய நற்சிந்தனைகளால் வளர்ந்து வரும் சுதா மேனிலைப் பள்ளியின் இருபத்து ஐந்தாம் ஆண்டு விழா வெள்ளிவிழாவாகக் கடந்த 30.03.2013 சனிக்கிழமை அன்று நடைபெற்றது. கல்வியாளர் முனைவர் ம. இலட்சுமணன் அவர்கள் தலைமையில் நடந்த அவ்விழாவில் புதுச்சேரி, தாகூர் கலைக்கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர்கள் முனைவர் ஆ. மணி அவர்களும், முனைவர் கு. ஞானகுரு அவர்களும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். அவ்விழாவின் படத்தொகுப்பு இங்கு. பணி மிகுதியால் இப்போதுதான் இதனைப் பதிவிட முடிந்தது. நன்றி. 

வரவேற்புரை : திரு இராஜகோபால் அவர்கள்,  (முதல்வர், சுதா மேனிலைப் பள்ளி)

விழா அரங்கின் தோற்றம்
ஆண்டறிக்கை வாசித்தல்.

முனைவர் ஆ. மணி அவர்களுக்குச் சிறப்புச் செய்கின்றார் முனைவர் ம. இலட்சுமணன் அவர்கள்


முனைவர் கு. ஞானகுரு அவர்களுக்குச் சிறப்புச் செய்கின்றார் முனைவர் ம. இலட்சுமணன் அவர்கள்

தமக்குப் பயிற்றுவித்த ஆசிரியருக்குச் சிறப்புச் செய்கின்றார் முனைவர் ம. இலட்சுமணன் அவர்கள்
தமக்குப் பயிற்றுவித்த ஆசிரியருக்குச் சிறப்புச் செய்கின்றார் முனைவர் ம. இலட்சுமணன் அவர்கள்

தமக்குப் பயிற்றுவித்த ஆசிரியருக்குச் சிறப்புச் செய்கின்றார் முனைவர் ம. இலட்சுமணன் அவர்கள்

கல்வியாளர் ம. பச்சையப்பன் அவர்களின் படத்திறப்பு விழா.
முனைவர் ம. இலட்சுமணன் அவர்களின் தலைமையுரை

முனைவர் ஆ. மணி அவர்களின் சிறப்புரை 
முனைவர் கு. ஞானகுரு அவர்களின் வாழ்த்துரை
விழாவில் பங்கேற்றோர்

போட்டிகளில் வெற்றி பெற்றோருக்குப் பரிசு, சான்றிதழ் வழங்கல்

தாகூர் கலைக்கல்லூரியில் இதழியல், மக்கள் தகவலியல் - சான்றிதழ்ப் பாடத் தொடக்கவிழா

        தாகூர் கலைக்கல்லூரித் தமிழ்த்துறை தொடங்கப்பட்டு ஏறத்தாழ 53 ஆண்டுகள் ஆகின்றன. அத்துறையில் இதுவரை இல்லாத நிகழ்வாக; புதியதொரு வரலாறாக; முதன்முறையாகப் பல்கலைக் கழக நிதிநல்கைக் குழுவின் உதவியுடன் இதழியல், மக்கள் தகவலியல் - சான்றிதழ்ப் பாடம் இக்கல்வியாண்டு முதல் தொடக்கப்பட உள்ளது. அதன் தொடக்கவிழா இன்று (07.08.2013 புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு நிகழவுள்ளது. தமிழன்பர்கள் பங்கு கொள்ள வேண்டுகின்றேன். அழைப்பு மடல் இத்துடன் இணைக்க ப்பட்டுள்ளது.

 அழைப்பிதழ் பக்கம் -1
அழைப்பிதழ் பக்கம் -2

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...