புதன், 5 அக்டோபர், 2011

தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கியம்- 87

இலக்கியம் - திணை இலக்கியம்


66. இரவு நேரத்தில் மழை முகிலின் இயக்கத்தைக் காண மின்மினியை விளக்காகப் பயன்படுத்தியதைப் பாடிய நற்றிணைப் புலவன் யார்?
பெருங்கௌசிகனார் (நற்.44).

67.  பரதவர் மகளுக்கும் (மீனவர் மகளுக்கும்) மன்னன் மகனுக்கும் இடையிலான காதலைப் பாடிய சங்க நூல் எது?
நற்றிணை (45).

68.    அறிவையும் உள்ளத்தையும் பகுத்துப் பாடிய நற்றிணைப் புலவர் யார்?
உலோச்சனார் (நற்.64).

69.   முருகன், வள்ளி புணர்ச்சியைப் பாடிய நற்றிணைப் புலவர் யார்?
அம்மல்லனார் (நற். 82).

70.  மாலைப்பொழுதை பகல்மடிபொழுது எனப் புனைந்த சங்க நூல் எது?
நற்றிணை (109).

செவ்வாய், 4 அக்டோபர், 2011

தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கியம்- 86

இலக்கியம் - திணை இலக்கியம்


61.   பண்டைத்தமிழரின் பொறியியல் நுட்பத்தினைக் காட்டும் கொல்லிப்பாவைப் பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ள நற்றிணைப் பாடல்கள் எவை?
நற். 185,192,201 ஆகிய மூன்று பாடல்கள்.

62.    நற்றிணைப் பாடல்களுள் புனையப்பட்டுள்ள பெரும்பொழுதுகள் எத்தனை?
ஆறு.

63. தலைவியின் நோய் அறியாது வெறியாடு களத்திற்கு வந்த முருகக் கடவுளை அறியாமை உடையவன் என இகழ்ந்துரைத்த நற்றிணைப் பாடலைப் பாடிய புலவர் யார்?
பிரம்மசாரி (ற்.34)

64.    பெயரன் (பேரன்) பற்றிய குறிப்பினைக் கூறும் நற்றிணைப் பாடல் எது?
நற். 40.

65.  வெயிலின் மிகுதித் தோற்றத்திற்கு வெண்ணிறஆடை விரிப்பை உவமை சொல்லிய நற்றிணைப் புலவர் யார்?
எயினந்தையார் (ற். 43).

தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கியம்- 85

இலக்கியம் - திணை இலக்கியம்


56.      மோசை என மோதிரத்தைக் கூறும் நூல் எது?
நற்றிணை (188).

57.  நற்றிணையில் இடம்பெற்றுள்ள ஒரு முலையறுத்த திருமா உண்ணி பற்றிய பாடற்பகுதி யாருடைய வரலாறாகக் கருதப்படுகிறது?
சிலப்பதிக்காரக் கண்ணகியின் வரலாறாகக் கருதப்படுகின்றது.

58. தன்னைச் சார்ந்தோர் துன்பத்தை நீக்குவதைச் செல்வமாகக் கருதிய நூல் எது?
நற்றிணை (210).

59. கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்ததைப் பாடிய பழந்தமிழ் நூல் எது?
நற்றிணை (9).

60.  கற்புடைய இளம்பெண் ஒருத்தி தன் குழந்தையைப் பேய்க்குப் பழிகொடுக்க எண்ணியதைப் பாடியநூல் எது?
நற்றிணை (15). பாடிய புலவர் அறிவுடைநம்பி.

திங்கள், 3 அக்டோபர், 2011

தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கியம்- 84

இலக்கியம் - திணை இலக்கியம்

51.       நற்றிணையை தொகுப்பித்தவர் பெயர் என்ன?
பாண்டியன் பன்னாடு தந்தான்.

52.       பாடல் தொடரால் பெயர்பெற்ற நற்றிணைப் புலவர்களின் எண்ணிக்கை?
எழுவர்.

53.       இளவேனிலை முதிராவேனில் என்றழைத்த நற்றிணைப் புலவர் யார்?
பாலை பாடிய பெருங்கடுங்கோ (நற். 337).

54.      நற்றிணையில் எத்தனை மரங்கள் பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ளது.?
47 மரங்கள்.

55.       முப்பத்தாறு வகைச் செடி,கொடிகளைப் பாடும் நூல் எது?
நற்றிணை.

தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கியம்- 83

இலக்கியம் - திணை இலக்கியம்


46.      சங்க இலக்கியங்களுள் அறத்தொடு நிற்றல் நிலையைப் பாடும் பாடல்களின் எண்ணிக்கை?
51.

47.      உடன்போக்கினைப் பாடும் சங்கப் பாடல்கள் எத்தனை?
122.

48.      சங்கப் பாடல்களுள் களவுக் கைகோளை மட்டும் பாடிய புலவர்களின் எண்ணிக்கை என்ன?
145.

49.      சங்கப் பாடல்களுள் கற்புக் கைகோள் பாடல்கள் எண்ணிக்கை?
966.

50.      கற்புக் கைகோளை மட்டும் பாடிய புலவர்களின் தொகை என்ன?
140.

ஞாயிறு, 2 அக்டோபர், 2011

தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கியம்- 82

இலக்கியம் - திணை இலக்கியம்


41.       நற்றிணைக்கு முதன்முதலில் உரை எழுதிப் பதிப்பித்தவர் யார்?
பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் (1914).

42. சங்க இலக்கியங்களுள் களவுக் கைகோளைப் பாடும் பாடல்களின் எண்ணிக்கை?
882.

43.   சங்க இலக்கியக் களவுப்பாடல்களுள் தோழியிற் புணர்ச்சி பற்றிய பாடல்கள் தொகை?
842.

44.      டலேறல் பற்றிய சங்கப்பாக்களின் எண்ணிக்கை?
13.

45.      வெறியாட்டு பற்றிப் பாடும் சங்கப்பாடல்களின் தொகை என்ன?
40.

தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கியம்- 81

இலக்கியம் - திணை இலக்கியம்

36.      நற்றிணையில் ஆசிரியர் பெயர் அறியப்படாத பாடல்களின் எண்ணிக்கை?
56.

37.       நற்றிணைக்கு திணை வகுத்தவர் யார்?
பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர்.

38.       நற்றிணை பாடல்களின் திணைப் பாகுபாட்டைக் கூறுக?
குறிஞ்சித்திணை -    131 பாடல்கள்
பாலைத்திணை  -    106 பாடல்கள்
நெய்தல்திணை  -    101 பாடல்கள்
மருதத்திணை   -    32 பாடல்கள்
முல்லைத்திணை     -    29 பாடல்கள்

39.      சங்கப்பாடல்களுக்கு கடவுள் வாழ்த்துப் பாடல்களைப் பாடியவர் யார்?
பாரதம் பாடிய பெருந்தேவனார்.

40.      நற்றிணைப் பாடல்களின் அடியளவு என்ன?
9 அடிமுதல் 12 அடிவரை (110,379 ஆகிய இரு பாடல்களும் 13 அடிப்பாடல்களாக உள்ளன).

தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கியம்- 80

இலக்கியம் - திணை இலக்கியம்


31.       ஐந்து புலவர்களால் பாடப்பட்டுத் தொகுக்கப்பட்ட எட்டுத்தொகை நூல்கள் யாவை?
ஐங்குறுநூறு. கலித்தொகை.

32.       திணை என்ற சொல்லை பெயரில் கொண்ட எட்டுத்தொகை நூல் எது?
நற்றிணை.

33.       பாடல் எண்ணிக்கையை பெயரில் கொண்ட தொகை நூல்கள் யாவை?
ஐங்குறுநூறு, அகநானூறு. புறநானூறு. பதிற்றுப்பத்து, பத்துப்பாட்டு.

34.      பத்துப்பாட்டு நூல்களின் பொருள் பகுப்பைக் கூறுக?
அகப்பொருள் நூல்கள் நான்கு (குறிஞ்சிப்பாட்டு, முல்லைப்பாட்டு, நெடுநல்வாடை, பட்டினப்பாலை). புறப்பொருள் நூல்கள் ஆறு. (திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, மலைபடுகடாம்).

35.       நற்றிணை பாடிய புலவர்களின் தொகை என்ன?
192.

சனி, 1 அக்டோபர், 2011

தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கியம்- 79

இலக்கியம் - திணை இலக்கியம்

26.      சங்க இலக்கியங்கள் பாடப்பட்டுள்ள பாவகைகள் யாவை?
ஆசிரியப்பா, கலிப்பா, பரிபா.

27.       எட்டுத்தொகையில் பாவால் பெயர் பெற்ற நூல்கள் யாவை?
கலித்தொகை (கலிப்பா), பரிபாடல் (பரிபா).

28.       எட்டுத்தொகை நூல்களைப் பொருள் அடிப்படையில் பகுக்க?
அகப்பொருள் நூல்கள் ஐந்து (நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு, கலித்தொகை). புறப்பொருள் நூல்கள் இரண்டு (புறநானூறு, பதிற்றுப்பத்து). அகமும் புறமும் கலந்த நூல் ஒன்று (பரிபாடல்).

29.      சேரநாட்டில் தொகுக்கப்பட்ட எட்டுத்தொகை நூல்கள் யாவை?
ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து ஆகியன.

30.      சேரநாட்டுத் தொகைநூல்களின் அமைப்பு ஒருமை என்ன?
ஒருபொருள் பற்றிய பத்துப் பாடல்கள்.

கலைச்சொற்கள்


தேவநேயப் பாவாணர் எழுதி 1967இல் நேசமணி பதிப்பகம் மூலமாக  வெளியிட்ட தமிழ் வரலாறு என்ற நூலில் அவர் தந்துள்ள சொல்லாக்கங்கள் இவண் தரப்படுகின்றன. ஆங்கிலச் சொல்லுக்குரிய தமிழ்ச்சொல், பிறமொழிச் சொற்களுக்குரிய தமிழ்ச்சொற்கள், தமிழ்ச்சொல்லுக்குரிய பொருள் என்ற நிலைகளில் இவை தரப்பட்டுள்ளன. இவற்றைப் பயன்படுத்துவது காலத்தின் தேவையாகும்.

ஆங்கிலச்சொல்     -    தமிழ்ச்சொல்
Literary dialect             -              இலக்கிய நடைமொழி
Voiceless                     -     பொலிவிலா
Pro nouns                     -     பகரப் பெயர்கள்
Sister dialect                -           உடன்பிறப்புமொழி
Pre dravidians              -     திரவிட முன்னையர்
proto dravidians           -           மூலத் திரவிடர்
Natural language          -     இயற்கை மொழி
Inarticulate speech       -     முழைத்தல் மொழி
Emotional sounds        -     உணர்ச்சியொலிகள்
Vocative sounds          -     விளியொலிகள்
Imitative sounds          -    ஒப்பொலிகள்
Symbolic sounds         -     குறிப்பொலிகள்
Nursery sounds          -     குழவி வளர்ப்பொலிகள்
Deictic sounds             -     சுட்டொலிகள்
Articulate speech         -           இழைத்தல் மொழி
Unit of speech             -     மொழியலகு
Homonymy                 -     பல்சொல்லொரு வடிவு
Polysemy                     -     பல்பொருளொரு சொல்
Meta thesis                   -           இலக்கணப்போலி
Analogy                       -     ஒப்புமையமைப்பு
Semantic changes        -     பொருட்டிரிவு முறைகள்
Euphemism                  -           இடக்கரடக்கல்
Pro boscis                    -     முன்தூம்பு
Specialization              -     சிறப்பிக்கை
Generalization             -     பொதுப்பிக்கை
Phonemics                   -    எழுத்தொலியம்
Diphthongs                  -     புணரொலியன்கள்
Voiced sounds             -     பொலிவொலிகள்
Allophones                  -     மறுவொலியன்கள்
Phonetics                     -     பலுக்கொலியம்
Accent                         -     விழுத்தம்
Transliteration              -     வரிபெயர்ப்பு
Violet                           -     கத்தரி (வண்ணம்)
Orange                         -     பழுக்காவி (வண்ணம்)

வடசொல்           தமிழ்ச்சொல்
வசதி           -    ஏந்து
உச்சரிப்பு        -    எழுத்துப் பலுக்கம்
சம்பந்தி         -    உறவாடி

தமிழ்               தமிழ்
குருவி          -    சிறுபறவை
கொண்மூ       -    கடல்நீரைக் கொள்ளும் முகில்
தொடரியம்      -    முற்றுச் சொற்றொடர்
அணங்குதல்     -    ஒலித்தல்
கதுவாலி        -    குறுகிய வாலையுடைய பறவையினம்
முனிதல்        -    வெறுத்தல்
ஆய்தம்         -    நுண்ணிய ககரம்
படைவீடு       -    படை மறவர் நிலையாக வதியும் இடம்
தாவளம்        -    அயலூரில் தங்கியிருக்குமிடம் ( Lodging)
நத்தம்          -    போரினாற் பாழானவூர்

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...