செவ்வாய், 4 ஜனவரி, 2011

புறநானூறு - ஔவை துரைசாமிப் பிள்ளை விளக்கவுரைப் பதிப்பு ( 1960)

         புறநானூற்றுக்குப் பழையவுரை ஒன்று உண்டு. அவ்வுரை உ.வே.சா.வின் குறிப்புரையோடு பதிப்பிக்கப்பட்டுள்ளது. ஔவை துரைசாமிப் பிள்ளை பழையவுரையைக் கண்ணழித்துப் பதவுரையாக்கித் தந்து, ஒவ்வொரு பாடலுக்கும் முன்னுரையும் விளக்கவுரையும் எழுதினார். முதல் 200 பாடல்களுக்கான உரை கழகப் பதிப்பாக 1947 மார்ச்சில் வெளிவந்தது.அதன் மறுபதிப்புக்கள் 1952, 1956,1960 ஆகிய ஆண்டுகளில் வந்தன.


        1.பாடலைப் பாடிய புலவர் பெயரைத் தலைப்பாகத் தருதல், 2. பாடல், புலவர்,அரசன் பற்றிய செய்திகளைக் கொண்ட முன்னுரை ( ஒரோவிடங்களில் பாடலின் பொழிப்புரையும் தரப்பட்டுள்ளது), 3. பாடல், 4. திணை, துறைக்குறிப்புக்கள், 5. பழையவுரை, 6. விளக்கவுரை ஆகிய கூறுகளைக் கொண்டது இப்பதிப்பு. அதன் தலைப்புப் பக்கம் இது.

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...