செவ்வாய், 21 டிசம்பர், 2010

புறநானூறு - உ.வே.சாமிநாதையர் பதிப்பு 1963

                      புறநானூற்றுக்கு உரை ஒன்றுண்டு என்ற செய்தியும்,  அவ்வுரைச் சுவடி ஒன்றும் உ.வே.சா.வுக்குச் சீவகசிந்தாமணிப் பதிப்புக் காலத்தில் கிடைத்தன. மேலும் முயன்று பல சுவடிகளைத் தேடித் தொகுத்தபோது அவ்வுரை முதல் 266 பாடல்களுக்கு மட்டுமே இருப்பது தெரியவந்தது. பழங்காலத்தில் எழுதப்பட்ட அவ்வுரையின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. இவ்வுரையின் குறிப்புக்களால் மற்றொரு பழைய உரையுண்டு என்ற உண்மை அறியப்பட்டாலும் அவ்வுரை தற்போது கிடைக்கவில்லை என்பார் உ.வே.சா..  கிடைத்துள்ள பழையவுரையின் ஆசிரியர் அடியார்க்குநல்லாருக்கு முற்பட்டவராக இருக்கலாம் என்பது உ.வே.சா.வின் கருதுகோள்.  இவ்வ்ரையின் முதற்பதிப்பு 1894- லும், இரண்டாம் பதிப்பு 1923- லும், முன்றாம் பதிப்பு 1935-லும் வெளிவந்துள்ளன. அதன் நான்காம் பதிப்பு உ.வே.சா.வுக்குப் பின்னர் 1950- லும்,  ஐந்தாம் பதிப்பு 1956- லும், ஆறாம் பதிப்பு 1963- லும் வெளிவந்துள்ளன.

     1963 இல் வெளிவந்த இந்த ஆறாம் பதிப்பிலும் உ.வே.சா.வின் கைப் புத்தகங்களாலும் பலவகைக் குறிப்புக்களாலும் கிடைத்த திருத்தங்கள் சேர்க்கப்பட்டிருப்பதாக அதன் பதிப்பாசிரியர் க.சுப்பிரமணியன் முகவுரையில் குறித்துள்ளார். சுபகிருது ஆண்டு மார்கழித் திங்களில் வெளிவந்த ஆறாம் பதிப்பின் தலைப்புப் பக்கம் இது.

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...