செவ்வாய், 28 டிசம்பர், 2010

அகநானூறு - நித்திலக்கோவை- ந.மு.வே. உரைப் பதிப்பு 1957

          அகநானூறு மூன்று பகுதிகளாகப் பகுக்கப்பட்டது என்பது நமக்குத் தெரிந்ததே ( முதல் பகுதி களிற்றியானைநிரை (1-120 பாடல்கள்), இரண்டாம் பகுதி மணிமிடைபவளம் (121-300 பாடல்கள்), மூன்றாம் பகுதி நித்திலக்கோவை (301-400 பாடல்கள்). ந.மு.வேங்கடசாமி நாட்டார், கரந்தை ஆர்.வேங்கடாசலம் ஆகியோர் இணைந்தெழுதிய அகநானூறு முழுமைக்குமான முதல் உரையின் மூன்றாம் பகுதி 1944 அக்டோபரில் முதற்பதிப்பாக வெளிவந்தது. அதன் மறுபதிப்புக்கள் 1951 சூலையிலும், 1957 மார்ச்சிலும் வெளிவந்தன. ஒவ்வொரு பகுதியிலும் பாட்டு முதற்குறிப்பு, ஆசிரியர் பெயர்வரிசை ஆகியன தரப்பட்டுள்ளன. அகநானூறு முழுவதும் ஒரே புத்தகமாக வெளிவரும்போது நூல்வரலாறு, உரைவரலாறு, அரும்பொருட்குறிப்பு ஆகியன சேர்க்கப்பெறும் என்பது 1957 ஆம் ஆண்டுப் பதிப்பின் பதிப்புரை தரும் செய்தியாகும். 1957 ஆம் ஆண்டுப் பதிப்பின் தலைப்பு பக்கம் இது.

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...