வியாழன், 28 அக்டோபர், 2010

குறுந்தொகைப் பதிப்புக்கள்

குறுந்தொகைக்கு இதுகாறும் வெளிவந்துள்ள பதிப்புக்களின் தோற்றம் எவ்வாறு அமைந்திருந்தது என்பதை அறிமுகம் செய்யும் பகுதி இது. பிற நூல்களுக்கும் இது தொடரலாம்.
குறுந்தொகை – தி.சௌ. அரங்கனார் உரைப்பதிப்பு (1915) – தலைப்புப் பக்கம் (அரங்கனாரின் சொந்தப் பதிப்பு - முதற்பதிப்பு)

குறுந்தொகை – தி.சௌ. அரங்கனார் உரைப்பதிப்பு (2000) – முன்னட்டை (முல்லை நிலையப் பதிப்பு - முதற்பதிப்பு)

குறுந்தொகை – தி.சௌ. அரங்கனார் உரைப்பதிப்பு (2008) – முன்னட்டை (முல்லை நிலையப் பதிப்பு – 2ஆம் பதிப்பு)

குறுந்தொகை – உ.வே.சா. உரைப்பதிப்பு (1937) - தலைப்புப் பக்கம் (உ.வே.சா.வின் சொந்தப் பதிப்பு – முதற்பதிப்பு)

குறுந்தொகை – உ.வே.சா. உரைப்பதிப்பு (1983) – முன்னட்டை (அண்ணாமலைப் பல்கலைப் பதிப்பு – முதற்பதிப்பு)



புதன், 27 அக்டோபர், 2010

தொல்காப்பியத்தின் முதற்பதிப்பு


மழவை மகாலிங்கையர் 1847 –லில் வெளியிட்ட தமிழின் மணிமுடியாகிய தொல்காப்பியத்தின் முதற்பதிப்பின் தலைப்புப் பக்கத்தின் தோற்றம். தொல்காப்பியப் பகுதிகளுள் முதன்முறை அச்சேறிய பெருமை எழுத்ததிகாரத்தின் நச்சினார்க்கினியர் உரைக்குரியதாகும்.

ஊடகப் பதிவுகள் - தொடர்

இளங்கலைப் பொருளாதாரப் படிப்பில் தமிழ்ப்பாடம் பற்றிய ஊடகப் பதிவுகளின் தொடர்ச்சி.
                                                தினமலர் நாளிதழ்ச் செய்தி
தமிழ் முரசு இதழ்ச் செய்தி
                                           தினகரன் நாளிதழ்ச் செய்தி

திங்கள், 25 அக்டோபர், 2010

ஊடகப் பதிவுகள்

இளங்கலைப் பொருளாதாரப் பாடத்திட்டத்தில் தமிழ் நீக்கம் பற்றிய ஊடகப் பதிவுகள்
 தினமலர் நாளிதழ்ச் செய்தி
 மாலைமலர் இதழ்ச் செய்தி
  தினகரன் நாளிதழ்ச் செய்தி

  தினமலர் நாளிதழ்ச் செய்தி

 தமிழ்முரசு இதழ்ச் செய்தி

  தினமணி நாளிதழ்ச் செய்தி

 தினத்தந்தி நாளிதழ்ச் செய்தி


புதன், 20 அக்டோபர், 2010

தமிழ்த் தடங்கலை நீக்க முயலும் தடங்கள்

தமிழ்ப்பாடம் மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும் என மாணவர்கள் விரும்புகின்றனர். எனவே, அவர்கள் தங்களின் வேண்டுகோளைப் பணிவுடன் துணைவேந்தர் அவர்களுக்குத் தெரிவித்துள்ளனர். துணைவேந்தர் அவர்களும் துறைத் தலைவர் அவர்களும் ஆவன செய்வார்கள் என நம்பலாம்.  


புதுவைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் அவர்களுக்கு மாணவர்கள் கடிதம் – பக்கம் 1





புதுவைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் அவர்களுக்கு மாணவர்கள் கடிதம் – பக்கம் 2


புதுவைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் அவர்களுக்கு மாணவர்கள் கடிதம் – பக்கம் 3

தமிழுக்காக ஒரு மின்மடல்

புதுவைப் பல்கலைக் கழகக் கல்லூரிகளில் இளங்கலைப் பொருளாதாரம் பயிலும் மாணவர்கள் இந்தாண்டு முதலே தமிழ்ப்பாடத்தைத் தொடர்ந்து பயிலும் வாய்ப்பினை வழங்குமாறு வேண்டி துணைவேந்தர் அவர்களுக்கு மின்மடல் அனுப்புக. மின்மடல் முகவரி : vc@pondiuni.edu.in

வியாழன், 14 அக்டோபர், 2010

செம்மொழித் தமிழுக்குத் தீமைசெய்தல் தகுமா?


புதுச்சேரி மற்றும் தமிழகக் கல்லூரிகளில் இளங்கலைப் பாடப்பிரிவுகளைப் பயிலும் மாணவர்களுக்குப் பகுதி 1 பாடப்பகுதியில் தமிழ்மொழிப் பாடம் கற்பது என்பது இன்றியமையாத ஒன்றாக இதுகாறும் இருந்துவந்தது. பல்கலைக் கழக நிதிநல்கைக் குழுவும் பகுதி 1, பகுதி 2 மொழிப்பாடங்களைப் பயிலுவது இன்றியமையாதது என்பதை வலியுறுத்தியுள்ளது. அண்மையில் புதுச்சேரி கல்லூரிகளில் இளங்கலைப் பொருளாதாரம் பயிலும் மாணவர்களுக்குத் தமிழ் பயிலும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பொருளாதாரத்துறைப் பேராசிரியர்களைக் கேட்டபோது இவ்வாண்டு முதல் பொருளாதாரத் துறையில் பயிலும்  மாணவர்களுக்குத் தமிழ்மொழிப்பாடம் இல்லை என்று கூறினர். ஆனால் முறைப்படியான அறிவிப்பு ஏதும் தமிழ்த்துறைக்கு வரவில்லை. இந்நிலையில் அவர்கள் தன்னிச்சையாக ஏதும் முடிவெடுக்கமாட்டார்கள் என்று நம்பினோம். என்றாலும் தாகூர் கலைக் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் வழியாகப் புதுவைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர், பொருளாதாரத் துறையின் புலமுதன்மையர், புதுவைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறையின் புலமுதன்மையர் ஆகியோருக்கு இளநிலைக் கல்வி பயிலும் மாணவர்கள் பகுதி 1 மொழிப்பாடம் பயில வேண்டியதன் தேவை குறித்து முறைப்படி மடல் அனுப்பப் பட்டது.
இதன் தொடர்ச்சியாகப் புதுவைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறைத் தலைவர் மற்றும் புலமுதன்மையர் அவர்களையும் கேட்டபோது இதுகுறித்துத் தகவல் ஏதும் வரவில்லை என்று அவர் கூறினார்.  பொருளாதாரத் துறையின் புலமுதன்மையர் அவர்களையும் சந்திக்க முயன்றபோது அவர் விடுப்பில் இருந்த்தால் அவருக்கு அடுத்த நிலையில் உள்ள பேராசிரியரைச் சந்தித்தோம். அவரும் பகுதி 1 மொழிப்பாடத்தின் இன்றியமையாமையை எடுத்துரைத்துப் புலமுதன்மையரின் கவனத்திற்குக் கொண்டு சென்று ஆவன செய்தாக உறுதியளித்ததோடு, புலமுதன்மையர் ந்ம் கருத்தினை ஏற்று உரிய ஆணை பிறப்பிக்கக் கடிதம் மூலமாகப்  பரிந்துரை செய்துள்ளதாகத் தெரிவித்தார். அதன்பின்னர் என்ன நடந்ததென்று தெரியவில்லை. திடீரென்று மறுபடியும் தமிழ்ப்பாடம் இந்தாண்டு மாணவர்களுக்குக் கிடையாது என்று பொருளாதாரத்துறையினர் தெரிவித்தனர். எனவே, மீண்டும் புதுவைப் பல்கலைக் கழகக் கல்வியியல் பகுதி 2ன் துணை பதிவாளரைச் சந்தித்தோம்.  
பொருளாதாரத் துறையின் புலமுதன்மையர் பரிந்துரைத்தால் தமிழ்கற்கும் வாய்ப்பு மாணவர்களுக்குக் கிடைக்கும் என்றார். இதன்தொடர்ச்சியாகப் பொருளாதாரத் துறையின் புலமுதன்மையரை நேரில் சந்தித்து எதிர்வரும் தலைமுறைக்குத் தமிழ்கற்கும் வாய்ப்பினைப் பெற்றுத் தருமாறு மனமுருக வேண்டினோம். அவர் முயற்சி செய்வதாக் கூறியுள்ளார் என்றாலும் இதனை அவர் செய்துமுடிக்கத் தூண்டுதலாகத் தமிழ் அமைப்புகளும் பத்திரிக்கை,வானொலி, தொலைக்காட்சித்துறை அன்பர்களும் தம் கருத்தினைத் தெரிவித்து உதவவேண்டும். தமிழுக்கு நாம் செய்யவேண்டிய பணி இது. அண்டைமாநிலமான தமிழகத்தில் பொறியியல், மருத்துவப் படிப்புகளும் தமிழ்வழியாக நடத்தப்பெறும்போது நம் மாநிலத்தில் தமிழ் மொழிப்பாடம் படிக்கின்ற வாய்ப்பினைப் பறிப்பது முறையாகுமா? என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும். 

செம்மொழித் தமிழுக்குத் தடையா?

புதுவைப் பல்கலைக் கழகத்தில் இந்தாண்டு முதல் பி.ஏ. பொருளாதாரம் படிக்கும் மாணவர்களுக்குத் தமிழ் மொழிப்பாடம் இல்லை என்று அறிவித்துள்ளனர். அருகில் உள்ள தமிழகத்தில் மருத்துவம், பொறியியல் போன்ற பாடத்திட்டங்களே தமிழில் நடத்தப்படும்போது இங்கு பாடத்திட்டத்தில் இருந்த செம்மொழியான தமிழ் நீக்கப்படுவது நியாயமா? தமிழர்களே! சிந்தியுங்கள். தமிழைக் காக்க முன்வாருங்கள்.

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...